Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா நினைத்திருந்தால்… கோலியை சீண்டும் விதமாக கம்பீர் அடித்த கமெண்ட்!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (07:46 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்திய அணி பற்றி காட்டமான விமர்சனங்களை சொல்லிவரும் அவர், அவ்வப்போது பாஸிட்டிவான கருத்துகளைக் கூறுவார். அந்த வகையில் இப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து பாஸிட்டிவ்வான கருத்தைக் கூறியுள்ளார்.

அதில் “ரோஹித் ஷர்மா நினைத்திருந்தால் தன்னுடைய கேரியரில் 45 சதம் வரை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் சதங்களைப் பற்றி நினைப்பதில்லை. அவர் தன்னலமற்ற வீரராக இருக்கிறார்.” என கோலியை சீண்டும் விதமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘நடுவர் பணம் வாங்குகிறார்.. அவரை வேலை செய்ய விடுங்கள்’- சேவாக் விமர்சனம்!

“அஸ்வின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்… safe zone-ல் விளையாடுகிறார்”… விமர்சித்த சீக்கா!

‘கிரிக்கெட்டில் எல்லாத்தையும் பாத்துட்டேன் என நினைச்சேன்… ஆனா இது என்னை ஸ்தம்பிக்க வச்சுடுச்சு’- ஹர்ஷா போக்ளே அதிர்ச்சி!

என்னப்பா இது வாங்குன டிக்கெட்ட அதே ரேட்டுக்கு வித்துட்டு இருக்காங்க… சிஎஸ்கே பரிதாபங்கள்!

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

அடுத்த கட்டுரையில்
Show comments