Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இப்போது இந்தியா எங்களை சாதாராணமாக நினைக்காது…” முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (09:08 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது.

இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்காக விளையாட உள்ள வீரர்கள் யார் என்பதை நான் இப்போதே தீர்மானித்து விட்டேன் என கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். மேலும் அவர் “வீரர்களிடம் கடைசி நிமிடத்தில் நீ விளையாட போகிறாய் என சொல்ல நான் விரும்பவில்லை. அனைத்து வீரர்களிடம் இதுகுறித்து நான் பேசிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் சல்மான் பட் “இப்போது உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல முடியாது என்ற பேச்செல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. இரு அணிகளும் சமபலம் கொண்ட அணிகளாகவே உள்ளன. அதனால் இந்திய அணி பாகிஸ்தானை எளிதாக எடுத்துக் கொள்ளாது என நினைக்கிறேன்” எனத் தன்னுடைய யுட்யூப் சேனலில் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments