Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும்…” கே எல் ராகுல் வெளியிட்ட கடிதம்!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (16:38 IST)
கே எல் ராகுல் கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட கே எல் ராகுல் கடைசி நேரத்தில் திடீரென விலகினார். அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதாக சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து இப்போது குணமாகி அணியில் இணைந்துள்ளார்.

இதையடுத்து இந்திய அணியின் அடுத்த தொடரான வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில் இப்போது அவர் ரசிகர்களுக்காக ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் “சில விஷயங்களைப் பற்றி தெளிவுபடுத்த வேண்டும்.  எனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. நான் அணிக்குள் திரும்ப இருந்த நேரத்தில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மீண்டும் ஒரு பின்னடைவு. ஆனால் இப்போது நான் உடல்நலம் தேறி வருகிறேன். விரைவில் அணிக்குள் திரும்புவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் பதற்றம் எதிரொலி; பஞ்சாப் - டெல்லி ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம்..!

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments