Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரும்பி வந்த ‘தல’ தோனி: கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (13:03 IST)
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் முதல் நடைபெற இருக்கும் நிலையில் பயிற்சிக்காக மகேந்திரசிங் தோனி சென்னை வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் கடைசியாக கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனி அதற்கு பிறகு எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு டெஸ்ட் மேட்சுகளுக்கும் பெயர் பட்டியல் வெளியாகும்போது அதில் தோனி பெயர் இருக்காதா என ஏங்கிய ரசிகர்களுக்கு கிடைத்ததெல்லாம் ஏமாற்றமே.

கிட்டத்தட்ட தோனி மைதானத்திற்குள் புகுந்து விளையாடி 7 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் மார்ச் முதல் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சி செய்ய இருக்கிறார் தோனி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் சார்பாக விளையாடும் தோனி மார்ச் 3 முதல் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளார்.

நீண்ட மாதங்கள் கழித்து தோனி பயிற்சியில் ஈடுபட போகும் நிலையில் அதை காண ரசிகர்கள் பலர் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். சென்னை வரும் தோனியை ஸ்டேடியத்தில் வரவேற்க பலர் பல்வேறு கொண்டாட்ட ஏற்பாடுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments