Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இன்னும் 30 டெஸ்ட்கள் விளையாடினால்?... ஷோயிப் அக்தர் சொல்லும் ஆருடம்!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (14:53 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு, இந்தியாவில் எப்படி ரசிகர்கள் அதிகமோ, அதுபோலவே பாகிஸ்தானிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட கோலியின் ரசிகர்களாக உள்ளன. அதில் மிக முக்கியமானவர் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். அவர் இப்போது கோலி பற்றி பேசும்போது “உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் சச்சின்தான் என நம்பி வந்தேன். ஆனால் அவரால் கேப்டனாக எதையும் சாதிக்க முடியவில்லை. கோலி, சமீபத்தைய தடுமாற்றத்துக்குப் பிறகு மனதை வலுவாக்கி, மீண்டும் கிரிக்கெட்டில் ஆட்சி செய்து வருகிறார். என்னிடம் நண்பர்கள் சிலர் நீங்கள் கோலியை அதிகமாக புகழ்கிறீர்கள் எனக் கூறுகின்றனர். அவரை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும் என்பதைதான் நான் அவர்களிடம் திரும்பிக் கேட்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் “கோலி இனிமேல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அவரின் எனர்ஜி டி 20 போட்டிகளில் வீணாகிறது. அவரால் இன்னும் 6 ஆண்டுகளுக்கு விளையாட முடியும். அவர் இன்னும் 25- 50 டெஸ்ட்களில் விளையாடினால் மேலும் 25 சதங்கள் அடிக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments