Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“முதல் போட்டியில் மட்டும் இது நடந்துவிட்டால் போதும்…” சுரேஷ் ரெய்னா சொல்லும் கணக்கு!

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (08:55 IST)
இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வென்றுவிட்டால் அதன் பின்னர் இறுதிப் போட்டிக்கு செல்வது கூட எளிதாகிவிடும் எனக் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சிறந்த கூட்டணியான பாபர் ஆசம்- முகமது ரிஸ்வான் ஜோடியை வீழ்த்த இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார். அதில் “அவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த ஸ்டம்ப்புக்கு உள்ளேயும், அவர்களின் உடலிலும் வீசவேண்டும். அப்போதுதான் அவர்கள் திணறுவார்கள். எல்பிடபுள்யு மூலமாக அவுட் ஆகவும் வாய்ப்புள்ளது.” எனக் கூறியுள்ளார். 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும். அந்த போட்டியில் இந்திய அணி வென்றுவிட்டால், அதன் பிறகு கோப்பையை வெல்வது கூட எளிதுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments