திக்குமுக்காடும் பிஎஸ்என்எல்: ஒரே மாதத்தில் 40 லட்சமா?

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (16:57 IST)
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நுழைந்தது முதல் மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருகின்றனர். மேலும், தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள சலுகைகலை வழங்கி வருகின்றன. 
 
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவன சேவையில் கடந்த மார்ச் மாதம் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் இணைந்திருப்பதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. 
 
இதில் போர்டபிலிட்டி சேவையின் கீழ் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த மாதம் அதிக அளவு பிஎஸ்என்எல் சேவையை ஏன் தேர்வு செய்துள்ளனர் என்றும் காரணம் வெளியிடப்பட்டுள்ளது. 
ஆம், புதிய சலுகைகள் மற்றும் கூடுதல் சேவைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதாம். இடையில் ஏர்செல் சேவை முடங்கியதாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இணைந்தனர்.
 
மேலும், டெலிகாம் சூழலுக்கு ஏற்ப கவர்ச்சிகர சலுகைகள் தொடர்ந்து அறிவிக்கப்படும் என பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments