Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நாட்களில் 19,000 கோடி ரூபாய்க்கு விற்பனை: அதிரடி காட்டும் அமேசான், ஃபிளிப்கார்ட்!

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (14:13 IST)
கடந்த வாரம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நடத்திய விழாக்கால விற்பனையில் 3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 19 ஆயிரம் கோடி) அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக ரெட்ஷீர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை விழாக்கால சிறப்பு விற்பனையை நடத்தின. இதில் கிட்டத்தட்ட 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்திருக்கின்றனர். நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான கஸ்டமர்கள் பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். புதிய ரக மொபைல்கள் விற்பனை, அதிரடி ஆஃபர்கள், கேஷ்பேக்குகள் என 6 நாட்கள் விற்பனை கோலாகலமாக நடந்தது.

ஸ்னாப்டீல் உள்ளிட்ட மேலும் சில ஆன்லைன் நிறுவனங்களும் விற்பனை நடத்தியிருந்தாலும் 95 சதவீத விற்பனையை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் செய்துள்ளன. இதன்மூலம் 3 பில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகி உள்ள நிலையில் அடுத்தக்கட்ட விழாக்கால விற்பனையில் மேலும் 3 பில்லியன் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments