Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீழ்வேன் என்று நினைத்தாயோ...!! திருப்பி அடிக்கும் பிஎஸ்என்எல்

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (19:25 IST)
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த சலுகைகள் அனைத்தும் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னரே துவங்கியது. காரணம் ஜியோ அப்படிபட்ட பல சலுகைகளை வழங்கியது. 

 
ஜியோ டெலிகாம் துறையில் வந்த பிறகு மற்ற நிறுவனங்கள் ஆடி போய்தான் இருக்கிறார்கள். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் மூடப்படவுள்ளதாக வதந்திகள் கிளம்பின. 
 
ஆனால், இப்போது பிஎஸ்என்எல் ஜியோவுக்கு நேரடி போட்டியாக பல சலுகைகளை அடுத்தடுத்து வழங்கி வருகிறது. அந்த வகையில் இப்போது தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.298 விலையில் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. 
புதிய ரூ.298 சலுகையில் 54 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜியோவின் ரூ.297 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.
 
பிஎஸ்என்எல், ஜியோவுக்கு போட்டியாக சலுகைகளை வழங்கினாலும், ஜியோ 4ஜி சேவையை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் 3ஜி/2ஜி சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments