Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது; சுமையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (16:09 IST)
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக டெபிட் கார்டு மற்றும் பீம் செயலி மூலம் ரூ.2000 வரையிலான பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 
பணமதிப்பிழப்புக்கு பின் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெபிட் கார்டு மற்றும் பீம் செயலி மூலம் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பரிவர்த்தனைக்கான கட்டணத்தை அரசே ஏற்பதாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும். இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. மேலும் இதனால் அரசுக்கு ரூ.2,512 கோடி இழப்பு என்று நிதிச் சேவைகள் செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments