Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்மியின் புது அவதாரம்: சியோமி அதிரடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (18:37 IST)
சியோமி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றது. குறுகிய காலத்தில் 4 மில்லியல் போன்கள் விற்று தீர்ந்தன. 
 
அதே போல், தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி ஒய் 3 ஸ்மார்ட்போன் குறித்த தகவலை சியோமி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
32 எம்பி செல்பி கேமராவுடன் சியோமி நிறுவனம் ரெட்மி ஒய் 3 ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. இதன் வர்த்தக விற்பனையாளராக அமேசான் இருக்க கூடும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. 
 
என்னதான் சாம்சங், ஒப்போ, விவோ என மற்ற நிறுவனங்களும் பல்வேறு வசதிகளுடன் ஸ்மார்டபோனை வெளியிட்டாலும், சியோமிக்கு நிகராக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியவில்லை. ஏனெனில் பட்ஜெட் விலையில் சியோமி ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments