Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி தினத்தில் இந்த கோவிலுக்கு சென்று எள் தீபமிடுங்கள்..!

Mahendran
செவ்வாய், 29 அக்டோபர் 2024 (18:46 IST)
திருச்சியிலுள்ள மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி எனும் புண்ணியத் தலம் உள்ளது. இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனின் திருநாமம் சிற்றஞீலிவனநாதர். பைஞ்ஞீலி என்றால் வாழை என பொருள்; வாழைத்தோப்புகளால் சூழப்பட்டிருப்பதால், ஊரின் பெயரும் இறைவனின் திருநாமமும் இவ்வாறு வழங்கப்படுகின்றன என்று ஸ்தல புராணம் கூறுகிறது.
 
திருமணத்திற்கு பின், குடும்பம் வளம் பெற , ‘வாழையடி வாழையாக வளமாக வாழ ஆசீர்வாதத்தை தரும் தன்மை உடையவர் இத்தல அம்பிகை சிற்ற நீள்நெடுங்கண் நாயகி. இந்த அம்பிகைக்கு ஸப்த கன்னியர்கள் கல்(யாண)வாழைகளாக இருந்து நிழல் தருவதாகும், இதற்கென்ற ஐதீகமும் இருக்கிறது.
 
இப்பெயரடிய திருப்பைஞ்ஞீலி, நீண்ட ஆயுளை அருளும் புனித தலமாகவும் புகழ்பெற்றுள்ளது. இங்கு அருளும் எமதருமன், மரண பயத்தை நீக்கி, இழந்த புகழையும் திரும்பக் கிடைக்கச் செய்பவர்.
 
 இத்தலத்துக்கு வருவோருக்குப் பயம் நீங்கி, நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ வேண்டுமென்று வரம் அருளினார். இத்தலத்தில் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் மிருத்யுஞ்சய ஹோமம் போன்ற பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்றும் சொல்லப்படுகிறது.
 
தீபாவளி திருவிழாவின் போது, எமனுக்கு எள் தீபம் ஏற்றி, எள் சாதம் நைவேத்யம் செய்து வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு அனுஷ்டானமாகும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலூர் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் .. சிலம்பாட்டம், மயிலாட்டம் பாரம்பரிய நடனங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments