Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துளசி மாலையின் சிறப்புகளும் பலன்களும் !!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:23 IST)
தெய்வ வழிபாட்டிற்கு என்று பல்வேறு வகையான தாவரங்கள் நாம் வழிபட்டாலும் அவற்றில்  மிகவும் புகழ்பெற்ற ஒன்று துளசி ஆகும். துளசி மகாலட்சுமி அம்சம் மேலும் திருமாலின் திருவடிகளில் சேவை செய்யும் வரம் இந்தச் செடிக்கு மட்டுமே உரியது.


துளசிக்கு மற்றொரு சிறப்பு பெயராக "விஷ்ணு பிரியா" என்று புகழ் பெற்றுள்ளது. அற்புதம் மிக்க துளசிச் செடியை வீட்டில் வைத்து வழிபடும்போது நேர்மறையான ஆற்றல் அங்கு ஊடுருவி இருக்கும்.

துளசி பட்டையிலிருந்து செய்யக்கூடியது துளசி மணி மாலை ஆகும் அதை அணிவதால் கிடைக்கும் நற்பலன்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். பெருமாள் கோயில் சென்று வழிபடும் போது துளசி மாலையை அணிவிப்பது சிறப்பாகும்.

விஷ்ணுவின் மறு அம்சமாக  கருதப்படக் கூடியவர் கேரளா மாநிலத்தில் இருக்கும் ஐயப்பன் ஆவார். துளசிமாலையை சாதனமாக நம் உடம்பில் அணியும் போது குளிர்ச்சித் தன்மையை உடலுக்கு  தருகிறது.

ஐயப்பனுக்கும் விஷ்ணுவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் விஷ்ணுவின் மோகினி அவதாரத்தில் பிறந்தவர் ஐயப்பன் ஆவார் அதனால் விஷ்ணுவுக்கு அணிவிக்கப்படும் துளசி மாலையை ஐயப்பனுக்கும் அணிவித்தால் சகலவிதமான சௌபாக்கியங்களும் கிட்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா: இன்று தேரோட்டம்.. பக்தர்கள் மகிழ்ச்சி..!

இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் நன்மை உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (07.05.2025)!

அக்னி நட்சத்திரத்தில் அண்ணாமலையாரை குளிர்விக்கும் அபிஷேகம்.. பக்தர்கள் வழிபாடு..!

இந்த ராசிக்காரர்களுக்கு இயந்திரம், நெருப்பில் கவனமாக இருக்கவும்!- இன்றைய ராசி பலன்கள் (06.05.2025)!

19 ஆண்டுகள் கழித்து பாபநாசம் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments