Publish Date: Sat, 11 Jul 2026 (14:05 IST)
Updated Date: Sat, 11 Jul 2026 (14:08 IST)
தற்போது எல்லார் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. செல்போன் பயனர்களை பிடிப்பதற்காக இன்ஸ்டாகிராம், ட்விட்டர், facebook போன்ற பல சமூக வலைத்தளங்களும் வந்துவிட்டன. இந்த மொபைல் செயலிகளெல்லாம் இல்லாமல் வாழவே முடியாது என்கிற நிலையை நம்மை சுற்றி இருப்பவர்களே உருவாக்கி விட்டார்கள்.
எனவே எது இருக்கிறதோ இல்லையோ பெரும்பாலானவர்களின் செல்போன்களில் இன்ஸ்டாகிரமும், பேஸ்புக்கும் இருக்கிறது. அது குறிப்பாக இன்று இளைஞர்கள் நிறைய பேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.. அதேபோல் குழந்தைகளுக்கு கூட ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கிறது..
இந்நிலையில்தான், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆப்கள் மக்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியிருக்கிறது.
மக்களின் மனநலனைப் பாதிக்க வழிவகுக்கும் அம்சங்களை முழுமையாக நீக்கி அல்தாரிதம் மற்றும் டிசைன்களில் உரிய மாற்றங்களை செய்யாவிட்டால் META-வுக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.