Publish Date: Sat, 11 Jul 2026 (13:39 IST)
Updated Date: Sat, 11 Jul 2026 (13:42 IST)
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக 3ம் இடத்திற்கு சென்றதில் இருந்தே அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் முதல்வர் விஜயையும், தவெகவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆதரவு தேவைப்பட்ட நிலையில் அமமுக எம்.எல்.ஏவை தவெக கடத்தி விட்டதாக புகார் சொன்னார். மேலும், ஆளுநரை சந்தித்தும் புகார் கொடுத்தார்.
அதன் ன் அந்த எம்எல்ஏ தவெகவுகு ஆதரவு கொடுத்ததால் அவரை கட்சியிலிருந்து நீக்கினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஆறு அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்ததே களவாணித்தனம்தான். அப்படியென்றால் களவாணி யார்? பிள்ளைக்கு பிடிப்பது போல எம்.எல்.ஏக்கள் பிடிப்பதை விஜய் தவிர்க்க வேண்டும்..
Reels less Work more என முதலமைச்சர் விஜய் மாற வேண்டும்.. ரீல் விடுவதை விட்டுவிட்டு ஆட்சி நிர்வாகத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என கூறியிருக்கிறார்.