Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாள் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (09:35 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த மூன்று நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்களும் பங்குச்சந்தை சரிந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் சுமார் 230 புள்ளிகளை உயர்ந்து 59 ஆயிரத்து 800 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி சுமார் 60 புள்ளிகள் உயர்ந்து 17,676 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments