Publish Date: Wed, 09 Nov 2022 (09:55 IST)
Updated Date: Wed, 09 Nov 2022 (09:59 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 100 புள்ளிகளுக்கு மேல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளது என்பதும் 61 ஆயிரத்து 305 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 40 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 240 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 61 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது
வரும் நாட்களிலும் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இது சரியான நேரம் என்றும் கூறப்படுகிறது