Publish Date: Tue, 07 Feb 2023 (09:57 IST)
Updated Date: Tue, 07 Feb 2023 (09:58 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை நன்றாக உயர்ந்து கொண்டு வந்த நிலையில் அதானி விவகாரம் காரணமாக படுவீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் ஒரு வாரத்துக்கு மேலாகியும் இன்னும் பங்குச்சந்தை மீள முடியாமல் திணறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்றும் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 390 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 20 புள்ளிகள் சரிந்து 17,740 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இன்னும் ஒரு சில நாட்களில் பங்குச் சந்தை மீண்டும் உயரும் என்று கூறப்படுகிறது.