Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார வாரம் 32 பெண்கள் மாயம்: என்ன நடக்குது யோகி ஆட்சியில்?

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (15:27 IST)
உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்து வருகிறது. இந்த மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல நடந்து வருகிறது. ஆனால், அரசோ இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாய் தெரியவில்லை. 
இந்நிலையில், தகவல் உரிமை சட்டத்தின் படி பதில் அளித்துள்ள மாநில குற்ற பதிவு ஆணையம் ஒவ்வொரு வாரமும் 32 பெண்கள் காணாமல் போகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 75 மாவட்டங்களில் இளம்பெண்கள் காணாமல் போனதாக 1,675 வழக்குகள் பதிவாகியுள்ளனவாம். 2018 ஆம் ஆண்டில் கடந்த 3 மாதங்களில் 435 பெண்கள் காணாமல் போயுள்ளதாக பதிவாகியுள்ளது.  
 
ஆனால், எஃப்.ஐ.ஆர் பதிவைவிட காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், முறையாக எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் பல பெண்கள் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments