Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து மாநில தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னணி

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (08:28 IST)
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல்கட்ட முன்னணி நிலவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

இதன்படி மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னணி பெற்று வருகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் பாஜக 5 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் பாஜக 3 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது. அதேபோல் சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரியர் சமிதி கட்சியும் காங்கிரஸ் கூட்டணியும் தலா இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. முதல்கட்ட முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்துள்ளதால் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments