Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் அடித்ததால் இறந்து போன சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (16:11 IST)
ஆசிரியர் அடித்ததால் 9 வயது சிறுவன் இறந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சுந்திரா புட்டு பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மோகன கிருஷ்ணன், மண்டல் பரிஷத் தொடக்கப்பள்ளியில் படித்து வந்தான். இந்நிலையில் கடந்த வாரம் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மோகன் கிருஷ்ணனை அடித்துள்ளார்.

இதனால் அந்த சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதன் பிறகு சிறுவனை அவனது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரு வாரம் கடந்த பிறகு அந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தான்.

இது குறித்து சிறுவனின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் அந்த ஆசிரியரின் மீது முதல் கட்டமாக எந்த நடவடிக்கையும் எடுக்க கல்வி அதிகாரி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments