Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான விவசாயி

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (16:18 IST)
நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணைமுட்டும் அளவில் உயர்ந்துள்ள  நிலையில், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த  நாராயண்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த துகாராம் ஒரே மாதத்தில் ஒரு கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த  நிலையில், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த  நாராயண்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த துகாராம் என்பவருக்கு அங்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இதில், 12 ஏக்கரில் தக்காளி பயியிட்டுள்ளார்.

இவருடன் இணைந்து அவரது மகன் ஈஸ்வரன் மருமகள் சோனாலி ஆகியோர் தங்கள் நிலத்தில் தக்காளி  பயிரிட்டுள்ளனர்.

சமீபத்தில் தக்காளி விலை அதிகரித்த  நிலையில்,, இவர்கள் ஒரு தக்காளி பெட்டி சராசரியாக ரூ.1000 முதல் ரூ.2400 வரை வருமானம் ஈட்டியுள்ளனர். இதன் மூலம் ஒரே மாதத்தில் மட்டும் ரூ.1.40 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

இதேபோல், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி ஒருவர்  ரூ38 லட்சம் வருமானம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“ஆபரேஷன் சிந்தூர்”: நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடையவரின் குடும்பமே பலி..!

பாகிஸ்தான் பதிலுக்கு தாக்க வாய்ப்பு.. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து..!

பயங்கரவாதிகளை அழித்த பெண் கர்னல் சோஃபியா குரேஷி! - யார் இவர்?

இன்று இரவுக்குள் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

எடப்பாடியார் உத்தரவிட்டால் ஆயிரம் பேர் பார்டர்ல சண்டை போடுவோம்! - ராஜேந்திர பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments