Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தியத்தை மீறி மது குடித்த தந்தை - விரக்தியில் மாணவி தற்கொலை

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (10:57 IST)
சத்தியத்தை மீறி தந்தை மது குடித்ததால் அவரது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக பெற்றோரின் குடிப்பழக்கத்தால் பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.
 
தருமபுரி மாவட்டம் மாரவாடி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ரஞ்சினி(16), கனிமொழி (13) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். ரஞ்சனி 9ஆம் வகுப்பு படித்து வந்தார். கனிமொழி 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
 
மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சம்பாதிக்கும் பணத்தை குடிப்பதற்கே செலவழித்து வந்த முருகனிடன் அவரது மகள், இனி குடிக்கக்கூடாது என சத்தியம் வாங்கியுள்ளார். மகளின் பேச்சைக் கேட்டு முருகனும் கடந்த 3 மாதங்களாக மது குடிக்கவில்லை
 
இந்நிலையில் நேற்று மகள் பள்ளிக்கு சென்ற நேரத்தில் முருகன் மது குடித்துள்ளார். பள்ளி முடிந்தபிறகு வீட்டிற்கு வந்த ரஞ்சனி, தந்தை தன்னிடம் அளித்த சத்தியத்தை மீறி மது குடித்திருப்பதைக் கண்டு மனமுடைந்தார்.
 
இதனையடுத்து தனது அறைக்குள் சென்று ரஞ்சிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தந்தையின் குடிப்பழக்கத்தால் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments