Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 நாட்கள் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: மபியில் கோரம்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (11:55 IST)
மத்தியபிரதேசத்தில் 2 லட்சத்திற்கு விற்கப்பட்ட இளம்பெண் ஒருவர் 24 நாட்கள் அடைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். 
 
இந்நிலையில் வேலை தேடிக்கொண்டிருந்த அவருக்கு புவராஜ் என்பவன் போன் செய்து, இந்தூரில் ரூ. 15,000 சம்பளத்திற்கு வேலை இருப்பதாகவும் தன்னை நேரில் வந்து சந்திக்கும்படியும் கூறியுள்ளான். இதனை நம்பிய அந்த பெண் யுவராஜை நேரில் சந்தித்தார்.
 
பின்னர் யுவராஜ், அந்த இளம்பெண்ணை ஒரு மாற்றுத் திறனாளியிடம்(காது மற்றும் வாய் பேச முடியாதவரிடம்) 2 லட்சத்திற்கு விற்றுள்ளான். அங்கு அந்த பெண் 24 நாட்கள் மிரட்டப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். அந்த நபர் வெளியே சென்ற போது அந்த பெண் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த பெண்ணை மீட்டனர். மேலும் அந்த பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிய யுவராஜையும் அந்த மாற்றுத் திறனாளியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments