Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3ஆம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.. அமித்ஷா உள்பட நட்சத்திர வேட்பாளர்கள் போட்டி..!

Siva
செவ்வாய், 7 மே 2024 (07:22 IST)
இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 
 
இன்று நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் இன்று காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், காஷ்மீரில் உள்ள அனந்தநாக்-ரஜோரி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தேர்தல் நடைபெறவில்லை என்பதும் சூரத் பகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அனந்தநாக்-ரஜோரி தொகுதியில் பனி காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று நடைபெறும் தேர்தலில் அமித்ஷா உட்பட நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் மொத்தம் 1352 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments