Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் முழு அடைப்பு: திருப்பதியில் தமிழக பக்தர்கள் தவிப்பு

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (08:59 IST)
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடந்து வருகிறது. ஆந்திர மாநில பேருந்துகள் ஓடவில்லை என்பதால் திருப்பதிக்கு சென்றுள்ள தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்களித்த மத்திய அரசு அதனை நிறைவேற்றாததால், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் விலக்கி கொண்டது. மேலும் கடந்த 20ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றையும் தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்தது. இந்த தீர்மானம் தோல்வி அடைந்தாலும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இதில் தெரிந்தது
 
இந்த நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். இதன்படி இன்று ஆந்திர மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது.. இதனால் தமிழகத்திலிருந்து திருப்பதி சென்ற பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும், தமிழகத்திலிருந்து ஆந்திரா சென்ற பேருந்துகள் ஆந்திர எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments