Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் புலிக்கும் மாட்டிறைச்சி தரக்கூடாது! – பூங்காவில் பாஜக தலைவர் போராட்டம்!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (10:50 IST)
அசாமில் புலிகளுக்கு மாட்டிறைச்சியை உணவாக தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் தலைமையில் சிலர் பூங்கா முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் குவாஹத்தி பகுதியில் விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு புலி, மான், சிங்கம் உள்ளிட்ட பல வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள சிங்கம் மற்றும் புலிகளுக்கு மாட்டிறைச்சி நாள்தோறும் உணவாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அம்மாநில பாஜக துணை தலைவர் சத்ய ரஞ்சன் போரா தலைமையிலான கூட்டம் ஒன்று பூங்காவின் வாயிலை மறைத்தவாறு போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்துக்கள் புனிதமாக கருதும் பசுக்களை வன விலங்குகளுக்கு உணவாக அளிக்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் வேறு இறைச்சியை விலங்குகளுக்கு அளிக்க வேண்டும் என போராட்டம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறும்போது ‘வன விலங்குகளுக்கு குறைந்த விலையில் அதிகமான இறைச்சி தேவை. மாட்டிறைச்சி மட்டுமே அவ்வாறு கிடைக்கிறது. மேலும் மாட்டிறைச்சியை விலங்குகளுக்கு வழங்க அரசாங்கத்தில் இருந்து எந்த தடையும் விதிக்கப்படவில்லை” என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments