Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்!

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (15:42 IST)
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தியாவில் சாமியாரும், பதஞ்சலி நிறுவனராகவும் இருப்பவர் பாபா ராம்தேவ். சமீபத்தில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாபா ராம்தேவ் “பெண்கள் புடவையில் அழகாக இருப்பார்கள். சல்வார் உடையிலும் அழகாக இருப்பார்கள். எதுவும் அணிந்திருக்காவிட்டாலும் அழகாக இருப்பார்கள்” என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்க கோரி மகளிர் ஆணையம் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ALSO READ: கதவு இடுக்கில் சிக்கி திருடன் பரிதாப பலி! – உத்தர பிரதேசத்தில் விசித்திர சம்பவம்!

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டு மகளிர் ஆணைய தலைவருக்கு பாபா ராம்தேவ் கடிதம் எழுதியுள்ளார். அதில், தான் பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடி வருவதாகவும், பெண்களை அவமரியாதை செய்யும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் பேசியதாக வெளியாகும் வீடியோ முழுமையானது அல்ல, எடிட் செய்யப்பட்டது என்றும், எனினும் யார் மனமாவது புண்படும் வகையில் தனது பேச்சு அமைந்திருந்தால் வருந்துவதாகவும், அவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

ஆபரேசன் சிந்தூர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments