Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்களை அங்கேயே சுட்டுக் கொல்ல வேண்டும்.. பாஜக அமைச்சர் பகீர்

Arun Prasath
திங்கள், 24 பிப்ரவரி 2020 (15:35 IST)
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் தேச துரோகிகளை அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்ல வேண்டும் என கர்நாடகா விவசாயத் துறை அமைச்சர் பிசி பாட்டீல் கூறியுள்ளார்.

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெங்களூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் மேடையேறி “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” (பாகிஸ்தான் வாழ்க) என முழக்கமிட்டார். இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. அம்மாணவியை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.

மேலும் அம்மாணாவியின் மீது தேச துரோக வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் விவசாயத் துறை அமைச்சர் பிசி பாட்டீல், செய்தியாளர்களை சந்தித்த போது, “நமது உணவை சாப்பிட்டு விட்டு தேசத்துக்கு எதிரான கருத்துகளை கூறுகிறார்கள். இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் தேச துரோகிகளை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்ல வேண்டும், இதற்காக பிரதமர் மோடி சட்டம் கொண்டு வரவேண்டியது அவசியம். இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments