Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன்முறையாக மூக்கு வழி கொரோனா மருந்து! – இந்தியாவில் அனுமதி!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (09:29 IST)
உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகள் இருந்து வருகின்றன. 2020ல் தொடங்கிய இந்த கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை கண்டுபிடிக்க தொடங்கின.

அவ்வாறாக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டது. இதுவரை இந்தியாவில் 100 கோடி டோஸ்களுக்கும் அதிகமாக இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பு மருந்தை ஊசிகள் மூலமாக மட்டுமல்லாமல் இன்ஹெலர் முறையிலும் கண்டுபிடிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வந்தன.

அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தும் வகையில் இன்கோவாக் (incovacc) என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக மூக்குவழி கொரோனா மருந்துக்கு அனுமதி இப்போதுதான் அளிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments