பீகார் தேர்தல் 2025: பாஜக பாதி.. ஐஜத பாதி.. தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள முடிவு..!

Siva
செவ்வாய், 7 அக்டோபர் 2025 (17:04 IST)
2025 பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
 
கூட்டணியின் முக்கியக் கட்சிகளான பா.ஜ.க.வும் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் சுமார் 205 தொகுதிகளை சமமாகப் பிரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளன. இருப்பினும், இறுதிப் பங்கீடு இன்னும் முடிவாகவில்லை.
 
மீதமுள்ள 38 தொகுதிகள், லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் சமதா ஆகிய சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளன. ஆரம்ப நிலவரப்படி, சிராக் பாஸ்வானின் LJP-க்கு 25, ஜிதன் ராம் மாஞ்சியின் HAM-க்கு 7, மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் RLM-க்கு 6 தொகுதிகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
 
சிராக் பாஸ்வானுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதால், அவரது ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சிறிய கட்சிகளுக்கு சட்டமன்றத் தொகுதிகள் குறைந்தால், அதற்கு ஈடாக மாநிலங்களவை அல்லது சட்ட மேலவை தொகுதிகளைப் பா.ஜ.க. வழங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறைச்சாலையா? மதுவிருந்து கூடாரமா? சிறைக்குள் நடந்த மதுவிருந்து வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!

முஸ்லீம் எம்பி இருந்தால் தானே அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியும்: பாஜக எம்பி சர்ச்சை கருத்து..!

ஆதார் இருந்தால் ஒருவரை வாக்காளராக சேர்க்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி..!

சித்தராமையா தான் முதல்வர்.. டெல்லிக்கு சென்ற ஆதரவாளர்கள்.. காங்கிரஸ் மேலிடம் குழப்பம்..!

முதல் மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. நண்பர்களை கூப்பிடும்போது ஏற்பட்ட விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments