Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாரும் டூர் போய்டாங்கப்பா அதுனாலதான் தோத்துத்டோம் - பாஜக அமைச்சரின் அறிவார்ந்த விளக்கம்

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (10:31 IST)
உத்தரப்பிரதேசம் கைரணா தொகுதியில் நடைபெற்ற தேர்தலின் போது, தொண்டர்கள் அனைவரும் டூர் சென்றுவிட்டதால் தான் பாஜக தோல்வி அடைந்தது என பாஜக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் கைரணா மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் மிரிகங்கா சிங் தோல்வி அடைந்தார். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பிஎஸ்பி, ஆதரவு பெற்ற ராஷ்டிரிய லோக் தள் வேட்பாளர் தபசம் ஹசன் வெற்றி பெற்றுள்ளார். இந்துப் பெரும்பான்மை தொகுதியான கைரணாவில் ஒரு இஸ்லாமியர் வெற்றி அடைந்திருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நூர்புர் சட்டசபை தொகுதியும் பாஜக தோல்வியடைந்தது.
 
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டதே பாஜகவின் தோல்விக்கு காரணம் என அனைவரும் கூறிக்கொண்டிருக்க, உத்திரபிரதேச பாஜக அமைச்சர் லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி கோடை விடுமுறை என்பதால் தொண்டர்கள் அனைவரும் குழந்தைகளுடன் வெளியூருக்கு டூர் சென்றுவிட்டதால் தான் இடைத்தேர்தலில் தோற்றோம் என கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விளக்கத்தை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments