போலிஸாரிடம் இருந்து 12 லட்சத்தை பறித்துக்கொண்டு சென்ற பாஜகவினர்- தெலங்கானாவில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (16:41 IST)
தெலங்கானாவில் பாஜக வேட்பாளரிடம் இருந்து போலீஸார் கைப்பற்றிய பணத்தை பாஜகவினர் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் தப்பக் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதி பாஜக வேட்பாளாராக ரகுநந்தன் ராவ் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக சொல்லப்பட்ட நிலையில் போலீஸார் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி 19 லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

இது பற்றி தகவலறிந்த பாஜகவினர், காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களிடம் இருந்து 12 லட்சம் ரூபாயைப் பிடுங்கி சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு ‍செய்த போலீசார், இது சம்மந்தமாக பண்டி சஞ்சய் குமா‌ரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments