Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக எம்.எல்.ஏவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் யார்?

உபி
Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (08:21 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. யோகேஷ் வர்மா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் யோகேஷ் வர்மா  நேற்று தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து ஒரு மர்ம நபர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் எம்.எல்.ஏவை சுட்டு விட்டு தப்பி ஓடினார்.

இதனால் எம்.எல்.ஏ.வின் காலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த நிலையில் அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது எம்.எல்.ஏவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உபி மாநில போலீசார், எம்.எல்.ஏவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments