Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு பாலியல் தொல்லை ; தாயே உடந்தை : அதிர்ச்சி செய்தி

Webdunia
திங்கள், 14 மே 2018 (16:43 IST)
சினிமா தியேட்டரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் செய்கையில் ஈடுபட்ட கேரள தொழிலதிபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
நாடெங்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, 3 வயது முதல் 13 வயது வரையிலான சிறுமிகள் பாலியல் இச்சைக்கு பலியாகும் செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
 
இந்நிலையில்தான், சமீபத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் செய்கையில் ஈடுபட்ட ஒரு தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, தனக்கு அருகில் அந்த சிறுமியை அமரவைத்து அவர் அந்த செய்கையில் ஈடுபடுவது கேமராவில் பதிவாகியுள்ளது. அப்போது, அவருக்கு அருகில் ஒரு பெண் இருப்பதும், அந்த தொழிலதிபரின் செயலை அவர் கண்டும், காணாமல் இருப்பது போலவும் இருந்தது. அந்த பெண் பார்ப்பதற்கு அந்த சிறுமியின் தாயைப் போலவே காணப்பட்டார்.
 
விசாரணையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சினிமா திரையரங்கில், திரையரங்க உரிமையாளர் அந்த செய்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல் அவரின் அருகில் இருந்தது, அந்த சிறுமியின் தாய் என்பதும், பணம் மற்றும் வசதிக்காக இதை அவர் அனுமதித்துள்ளர் என்ற அதிர்ச்சியான உண்மை தெரிய வந்தது. 
 
எனவே, அந்த தொழிலதிபரோடு, அந்த பெண்ணையும் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலதிபர் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில்தான் அப்பெண்ணும் வசித்து வருகிறர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, தனது மகளை தொழில் அதிபருக்கு அவர் விருந்தாக்கியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்