Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Siva
வெள்ளி, 9 மே 2025 (08:41 IST)
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது.
 
பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் இந்திய எல்லையை நோக்கி பறந்தாலும், இந்தியாவின் உயர் பாதுகாப்பு முறை அவற்றை வானிலேயே தடுத்து அழித்தது.
 
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. சில இடங்களில் இரு பக்க ராணுவங்களும் தாக்குதல் நடத்தி வருவதால், பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.
 
இந்த சூழ்நிலையில், மே 9 முதல் 14 வரை நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் (ICAI) அறிவித்துள்ளது.
 
இது குறித்து இணைச் செயலாளர் ஆனந்த்குமார் சதுர்வேதி கூறியதாவது:
"நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலையை முன்னிட்டு, சிஏ தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்கள் www.icai.org என்ற இணையதளத்தில் தொடர்ந்து தகவல்களை பார்வையிடலாம்" என்றார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!

பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களில் ஒன்று கூட உருப்படியில்லை.. இடைமறித்து அழித்த சுதர்சன சக்கரம்..!

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments