Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம் - மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

Webdunia
திங்கள், 7 மே 2018 (16:24 IST)
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

 
உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும் என்றும் அவ்வாறு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். 
 
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் வகையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக செய்தியாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்திற்கு 4 டி.எம்.சி நீரை தர முடியாது என கர்நாடக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மழை பற்றாக்குறையால் தங்களால் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட முடியாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
அதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மத்திய அரசு பிரம்மாணப்பத்திரத்தை இன்று தாக்கல் செய்தது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த அனைத்து நடவடிகைக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments