Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி மலைப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு ‘பிரம்பு கம்பு’ வழங்கப்படும்: தேவஸ்தானம் அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (17:46 IST)
திருப்பதி மலை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக ‘பிரம்பு கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் தலைவர் கருணாகரன் ரெட்டி பேட்டியளித்துள்ளார். 
 
திருப்பதி மலை பாதையில் செல்லும் பக்தர்களை சிறுத்தை தாக்கி வருவதாகவும் சமீபத்தில் 6 வயது சிறுமி உயிர் இழந்த நிலையில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 இந்த நிலையில் திருப்பதி மலை பாதையில் வனவிலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு ‘பிரம்பு கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
அதுமட்டுமின்றி வேறு சில பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  6 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்ட நிலையில் மேலும் ஒரு சிறுத்தை மலை பாதையில் நடமாடி வருவதாக கூறப்படுவது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments