Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு மூளை இல்லையா...? பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (17:39 IST)
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சப்- கலெக்டராக பணியாற்றி  வருபவர் ரானு ராஜ்(30). இவர் இப்பகுதியின் முதல் பெண் சப் இன்ஸ்பெக்டர் ஆவார். சமீபத்தில் கோர்ட் உத்தரவை மீறி அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ராஜேந்திரன் கட்டிடம் கட்டி வருகிறார். இந்தக் கட்டிடப்பணிகளை நிறுத்தும்படி ரேணு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
பின்னர் இது குறித்து ரேணு ராஜுவும் , ராஜேந்திர்டனும் பொது இடத்தில் பொதுமக்கள் முன் வாகுவாதம் செய்தனர். ராஜேந்திரன் கூறியதாவது அரசு சார்பில் என்னிடம் விளக்கம் கேட்பது இதுதான் முதல்முறை... கட்டிட விதிமுறைகளை வகுக்க வேண்டியது பஞ்சாயத்துதானே தவிர இவர் அல்ல. இவர் மூளையில்லாதவர். இவரைப்போன்ற மூளை இல்லாதவர்களை நான் பார்த்ததில்லை; என்று தெரிவித்தார்.
 
இதனையடுத்து ரேணு ராஜ் பேசியதாவது: நீதிமன்ற உத்தரவின் படியே நான் நடவடிக்கை எடுத்தேன். அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டினால் அது கோர்ட் அவமதிப்பு. மேலும் இதுசம்பந்தமாக நான் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலருக்கு அறிக்கை  அனுப்பி விட்டேன். என் பணியை நான் செய்வேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
சப் - கலெக்டரும் . எம்.எல்.ஏவும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments