Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமானவரியை இன்னும் கணக்கை தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம்

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (18:33 IST)
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான வருமானத்திற்கான வருமான வரியை ஜூலை மாதத்திற்குள் தாக்கல் செய்து வரியை கட்டி முடிக்க வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டும் வருமான வரியை ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்து ரூ.5000 அபராதத்தை தவிர்க்குமாறு வருமான வரித்துறையினர் கேட்டுக்கொண்டு வந்தனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான அறிவிப்பின்படி வருமான வரியை தாக்கல் செய்ய வரும் ஆகஸ்டு 31-ந்தேதி வரை நீட்டித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒருமாத கால அவகாசம் இருப்பதால் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பொறுமையாக தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments