Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு மீது உட்கார்ந்தால் ஆட்டோ பரிசு! பரிதாபமாய் பறிபோன உயிர்! - அதிர்ச்சியளிக்கும் CCTV Video!

Prasanth Karthick
செவ்வாய், 5 நவம்பர் 2024 (11:38 IST)

பெங்களூரில் பட்டாசு மீது அமர்ந்தால் ஆட்டோ வாங்கி தருவதாக நண்பர்கள் கூறியதை நம்பி, பட்டாசில் அமர்ந்த நபர் பரிதாபமாய் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பெங்களூரு தெற்கு பகுதியில் உள்ள கோனனாகுண்டே பகுதியை சேர்ந்தவர் 32 வயதான சபரிஷ். இவர் தீபாவளி அன்று இரவு தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது நண்பர்களிடையே ஒரு போட்டி எழுந்த நிலையில், வெடிக்கும் பட்டாசு மீது அமர்ந்தால் ஆட்டோ வாங்கி தருவதாக நண்பர்கள் சபரிஷ்க்கு சவால் விட்டுள்ளனர்.

 

சவாலை ஏற்ற சபரிஷ் ஒரு பெரிய வெடி மீது அமர்ந்திருக்க அவரது நண்பர்கள் அந்த வெடியை கொளுத்தினர். வெடி வெடித்து சிதறிய சிறிது நேரத்தில் மயக்கமடைந்து சரிந்த சபரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 
 

ALSO READ: சைபர் குற்றவாளியாக மாற்ற கோச்சிங் சென்டர்.. கைதானவரின் அதிர்ச்சி தகவல்..!
 

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சபரிஷ் பட்டாசு மீது அமர்வதும், நண்பர்களே அதற்கு தீ வைப்பதுமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments