Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருணாச்சல பிரதேச பகுதிகளின் பெயரை மாற்றும் சீனா.. இந்தியா பதிலடி..!

Mahendran
புதன், 14 மே 2025 (10:48 IST)
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை சூட்ட முயற்சி செய்துள்ளது. இதற்கு இந்திய அரசின் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இந்தியா மற்றும் சீனாவுக்கிடையே நீண்ட காலமாக எல்லை விவாதம் நிலவி கொண்டிருக்கிறது. இந்த பின்னணியில், 2024 ஏப்ரல் மாதம் சீனா, அருணாசல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு தன் மொழியில் பெயர்கள் வைத்தது. சீனாவின் பார்வையில், அருணாசலத்தை 'ஜாங்னான்' என்ற பெயரில் குறிப்பிடுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு 6 இடங்களுக்கும், 2021ஆம் ஆண்டு 15 இடங்களுக்கும், 2023ஆம் ஆண்டு 11 இடங்களுக்கும் புதிய பெயர்கள் சூட்டியது.
 
மீண்டும், தற்போது பல இடங்களுக்குப் பெயர் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சீனாவை தடுக்க, இந்திய வெளியுறவுத்துறை தளபதி ரந்தீர் ஜெய்ஸ்வால் கடுமையாக பதிலளித்துள்ளார்.
 
அருணாசலப் பிரதேசம் என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும் என்பதையும், இங்கு பெயர் மாற்றம் செய்தாலும் அதனால் யதார்த்தம் மாற முடியாது என்றும் அவர் தெளிவாக கூறியுள்ளார். சீனாவின் இம்மாதிரியான முயற்சிகள் வீண், காரணமற்ற மற்றும் ஏற்க முடியாதவை என அவர் சுட்டிக்காட்டினார்.
 
இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாகத் திகழ்கிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்பார்த்தது போலவே தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றும் 400 ரூபாய் சரிவு..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்வு.. என்னென்ன பங்குகள் லாபம்..!

மாமியாரை பயன்படுத்தி பண மோசடி செய்த சிறை வார்டன்.. சஸ்பெண்ட் செய்ய உத்தரவு..!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.. என்ன காரணம்?

பொள்ளாச்சி வழக்கு போலவே கோடநாடு வழக்கிலும் உரிய தீர்ப்பு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments