Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரெண்டாகும் காஷ்மீர்: இந்தியா முழுவதும் ஒருமித குரல்!!

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (10:26 IST)
காஷ்மீரில் நிலவும் சூழல் சரிசெய்யப்பட வேண்டும் என்று இணையவாசிகள் அனைவரும் பிராத்தனை செய்து வருகின்றனர். 
 
ஜம்மு காஷ்மீரில் அசாதரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.  
 
ஜம்முவில் நேற்று நள்ளிரவு முதல் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
பள்ளிகள், கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோன் ஆகியோர் நள்ளிரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
காஷ்மீரில் உள்ள சூழ்நிலை சரியாக இணையவாசிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும் பலரும் அங்குள்ள மோசமான நிலையையும் பதிவிட்டு வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியரும் காஷ்மீருக்காக குரல் கொடுத்து வருகின்றனர். 
 
#operationkasmir, #SaveKashmirSOS, #IndiaForKashmir, #StandwithKashmir, #JammuAndKashmir, #KashmirParFinalFight, #KashmirHamaraHai என்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments