Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவம், பொறியியல் படிப்புகள் தாய்மொழியில் கற்பிக்கப்படும்: முதலமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (14:47 IST)
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் ஹிந்தியில் கற்பிக்கப்படும் என மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய போது அறிவுக்கும், ஆங்கிலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் இனி மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை ஹிந்தியில் கற்பிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
ஏழை விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை பலருக்கு ஆங்கிலம் தெரியாத போது திறமையாளராக இருந்தும் மருத்துவம், பொறியியல் படிப்பு படிக்க முடியாத நிலையில் உள்ளனர் என்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் தாய் மொழியில் மருத்துவ கல்வி கற்பிக்கப்படுவது போல் மத்தியபிரதேசம் மாநிலத்திலும் தாய் மொழியில் தான் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு கற்பிக்கப்படும் என்ற முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு ஹிந்தியில் கற்பிக்கப்படும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் தான் என்றும் அவர் பெருமையுடன் தெரிவித்துக் கொண்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments