Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”மத்ததெல்லாம் ஒர்ஸ்ட்டு, இந்தியா தான் பெஸ்ட்”.. நிர்மலா சீதாராமன் புகழாரம்

Arun Prasath
வியாழன், 17 அக்டோபர் 2019 (18:40 IST)
முதலீட்டாளர்களுக்கு உலகிலேயே சிறந்த இடம் இந்தியா தான் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் முதலீட்டாளர்களிடம் பேசிய, நிர்மலா சீதாராமன், ”முதலாளித்துவத்திற்கு மதிப்பளிக்கும் சூழல் இந்தியாவில் தான் உள்ளது, சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நீடிக்கும் இந்த சூழலிலும் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று” என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேலும், முதலீட்டாளர்களுக்கு தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, முதலீடு செய்ய இந்தியாவை விட சிறந்த இடம் வேறெதுவும் இல்லை” என கூறியுள்ளார்.

முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட் இல்லையென பாஜகவினரை பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில், தற்போது முதலீடு செய்ய இந்தியாவை விட சிறந்த நாடு இல்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு இயல்பை விட 90% மழை அதிகம் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments