Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் பக்கோடா பயிற்சி மையம்: பட்டைய கிளப்பும் சமாஜ்வாதி!

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (14:34 IST)
ஒரு இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்றால், அதுவும் வேலைவாய்ப்புதானே என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது எதிர்க்கட்சிகளால் மிகவும் விமர்சிக்கப்பட்டது.
 
இந்நிலையில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு உத்தரப்பிரதேசம் மாநிலம் பரோலியில் துளசி பூங்கா அருகில் பிரதம மந்திரி பக்கோடா பயிற்சி மையம் என்ற பெயரில் பக்கோடா சமைக்கும் பயிற்சிக்கான வகுப்புகளை நடத்தியது சமாஜ்வாதி கட்சி.
 
இதில், பட்டதாரிகளுக்கு நான்கு விதமான பக்கோடா செய்யும் பயிற்சி வழங்கப்பட்டது. பி.டெக்., எம்.டெக். பட்டதாரிகளுக்கு மோடி பக்கோடாவும், எம்.பி.ஏ. மற்றும் பி.எச்.டி பட்டதாரிகளுக்கு அமித்ஷா பக்கோடாவும், எம்.காம் முடித்தவர்களுக்கு அருண் ஜேட்லி பக்கோடாவும், பட்டப்படிப்பு முடித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு யோகி பக்கோடாவும் சமைக்க கற்றுத்தரப்பட்டது.
 
சமாஜ்வாதி கட்சியில் இருப்பவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லாதபடியால், மூன்று சிறந்த சமையல்காரர்களை அழைத்து வந்து இந்த பயிற்சி வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர் என சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அடா உர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments