Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

Mahendran
ஞாயிறு, 18 மே 2025 (12:14 IST)
நாடாளுமன்ற செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய 17 பாராளுமன்ற உறுப்பினர்கள், “சன்சத் ரத்னா” விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை இந்த விருதுகளை வழங்கி வருகின்றது. எம்.பி.க்களின் செயல்திறன், கலந்துரையாடல்களில் ஈடுபாடு, மசோதா விவாதங்கள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
 
2024-ஆம் ஆண்டு விருதுக்கான தேர்வை, பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத் தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையிலான குழு மேற்கொண்டது.
 
இந்தப் பட்டியலில், பிஜு ஜனதா தளத்தின் பருத்ஹரி மஹ்தாப், தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே, சமஸ்தா கட்சியின் என்.கே. பிரேமச்சந்திரன், சிவசேனாவின் ஸ்ரீரங் பர்னே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
 
அதேபோல் பாஜகவின் ஸ்மிதா வாக், ரவி கிஷன், நிஷிகாந்த் துபே உள்ளிட்ட பலரும் விருதுக்கு பெயரிடப்பட்டுள்ளனர்.
 
தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரைக்கும் இந்த பாராட்டுப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments