Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பி எண்ணப்போகும் ப.சிதம்பரம்? கைவிரித்தது உச்ச நீதிமன்றம்!

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (12:48 IST)
சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
 
இதனையடுத்து ப.சிதம்பரம் காவல் இன்றுடன் முடிவுக்கு வருவதால் அவரை சிபிஐ தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. மேலும் ப.சிதம்பரம் காவலை நீடிக்க சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. 
இதனிடையே சிதம்பரத்தை சிபிஐ கைது செய்ததற்கு எதிரான கபில் சிபல் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. வழக்கின் விசாரணைக்கு பின்னர், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது. 
 
சிபிஐ ஏற்கனவே ப.சிதம்பரத்தை கைது செய்து விட்டதால் வழக்கு காலாவதியாகிவிட்டது. எனவே முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது. 
முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நீடிக்கப்படும் என தெரிகிறது. அதோடு அமலாகத்துறையும் சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 2 ஆம் தேதி வரை மட்டுமே தடை விதித்துள்ளதால், அதன் பின்னர் அமலாக்கத்துறை கைது செய்தால் ப.சிதம்பரம் தரப்பிற்கு மேலும் சிக்கல் உண்டாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments