Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமர் அறிக்கை தரும் வரை விடமாட்டோம்: மணிப்பூர் விவகாரம் குறித்து திருச்சி சிவா..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (07:57 IST)
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் அறிக்கை தரும் வரை விட மாட்டோம் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 
 
 மணிப்பூர் பிரச்சனை கொழுந்து விட்டு எரியும் நிலையில் பிரதமர் இது வரை இது குறித்து பேசவில்லை. குறைந்தபட்சம் நாடாளுமன்றத்திற்கு வந்து ஒரு அறிக்கை அளித்து இருக்க வேண்டும். 
 
மணிப்பூரில் தற்போது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று நாங்கள் ஒரு குழுவாக மணிப்பூர் செல்ல இருக்கிறோம். மக்கள் இந்த பிரச்சனையை கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிக்கு தயாராக இல்லை என்று சொல்வதில் உண்மை இல்லை 
 
பிரதமர் வந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும், அப்போது நாங்களும் பேச தயார், அவர் அறிக்கை அளிக்கும் வரை நாங்கள் அவரை விட மாட்டோம் என்று திருச்சி சிவா எம்பி பேட்டியில் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments