Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மராட்டியத்திற்குள் சிபிஐ நுழைய தடை! – உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (13:51 IST)
மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் விசாரணை நடத்த அனுமதியின்றி சிபிஐ அதிகாரிகள் நுழைய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தடை விதித்துள்ளார்.

சிபிஐக்கு வழங்கப்படும் வழக்குகளை விசாரிக்க நாட்டில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் சென்று தேவையான விசாரணை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு பொது இசைவு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுமதி பெறாமலே விசாரணைக்காக மாநிலங்களுக்குள் செல்லலாம். ஆனால் சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த இந்த பொது இசைவை கடந்த சில காலங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் திரும்ப பெற்றன.

இந்நிலையில் மும்பை தொலைக்காட்சி டிஆர்பி முறைகேடு, சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு என சிபிஐ மகராஷ்டிராவில் ஏகப்பட்ட வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சிபிஐக்கு வழங்கி வந்த பொது அனுமதியை ரத்து செய்துள்ளார் முதல்வர் உத்தவ் தாக்கரே. இனி விசாரணைகளுக்கு மாநில அரசின் அனுமதி பெற்றே சிபிஐ நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments